அன்புள்ள வீரமணி ஐயா,
வணக்கம். நான் உயர்நிலை 2 ல் படித்துக்கொண்டிருந்தபோதே வானொலி மாணவர் நிகழ்வில் கலந்துகொண்டபோதே உங்களை அறிவேன். மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தேன். (1971) அதன்பிறகு நான் தமிழகம் சென்று படித்து ஊர் திரும்பிய பிறகு 1983 லிருந்து இளையர் மன்ற நடவடிக்கைகளில் இணைந்துள்ளேன். அன்றிலிருந்து இன்றுவரை ஐயாவின் ஆழ்ந்த சமூகப் பற்றைக் கண்டு வியந்துள்ளேன். இளையர்களை வழிநடத்தும் அந்த தொடர் ஆற்றல் கண்டு பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் வழியில் நின்று முடிந்தவரை இளையர் மன்ற வாழ்நாள் ஆலோசகராக முடிந்த சேவை செய்து வருகிறேன். யாவும் அவரது வழிகாட்டுதல் படியே. உங்களது தொடர் ஆற்றல் கண்டு பெருமை கொள்கிறேன். வேறு யாராலும் இவ்வாறு தொடர் தொண்டு செய்ய இயலுமா என்று தெரியவில்லை. உங்கள் ஆற்றலை மதிக்கின்றேன். உங்கள் தெளிவான பற்றை போற்றுகின்றேன். உங்கள் கொள்கைகள் தொடரட்டும். உங்கள் சேவை வளரட்டும். உங்கள் நீண்ட ஆயுளுக்கு வேண்டுகின்றேன். உங்கள் வழிகாட்டுதலை வரவேற்கின்றோம். என்றும் வாழ்க வளமும் நலமும் பெற்று. இறையருள் நிச்சயம் காக்கும்.
அன்புடன்,
அ.மல்லிகா (14/012025)